close
Choose your channels

'செக்க சிவந்த வானம்" 2வது டிரைலர் விமர்சனம்

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வரும் 27ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் 2வது டிரைலர் வெளிவந்துள்ளது.

அண்டர்வேர்ல்ட் கிங் பிரகாஷ்ராஜூக்கு பின்னர் அவருடைய இடத்தை பிடிப்பது அவருடைய மகன்களில் யார்? என்பதும், அந்த இடத்தை பிடிக்க ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிப்பதும்தான் கதை என்பது போல் இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிகிறது. மூன்று மகன்களுக்கு இடையே நடக்கும் போரை காவல்துறை அதிகாரி கட்டுப்படுத்துகிறாரா? என்பதுதான் கதையாக இருக்கும் என தெரிகிறது.

'அண்ணா இதை ஆரம்பிச்சு வச்சது நீ' என்ற ஆக்ரோஷமான நடிப்பை தந்திருக்கும் சிம்பு, தம்பிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அமைதியாக வசனம் பேசும் அரவிந்தசாமி, அருண்விஜய்யின் ஸ்டைலிஷான வில்லத்தனம், இவர்களை எக்காளத்துடன் கண்காணிக்கும் விஜய்சேதுபதி என டிரைலர் ஒரு முழுநீள ஆக்சன் படத்தை முன்னிறுத்துகிறது.

மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணியுடன் கூடிய பாடலில் இருந்து ஒரு இசைவிருந்து உறுதியாகிறது. கேமிரா எடிட்டிங் என அனைத்தும் கச்சிதமாக இருக்கும் ஒரு படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக மணிரத்னம் படைக்கவுள்ளார் என்பது மட்டும் இந்த டிரைலரில் இருந்து தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.