close
Choose your channels

அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல: செல்முருகனின் உருக்கமான பதிவு

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமான செல்முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் காலமானது குறித்து பதிவு செய்துள்ள டுவீட்டில் அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை என பதிவு செய்துள்ளார்.

செல்முருகனின் இந்த உருக்கமாக பதிவை படிக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது என டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:


ஓர் மரணம் என்ன செய்யும்

சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்

சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்

சிலர் RIPபுடன் கடந்த போவார்கள்

சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்

சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்

ஆனால் அண்ணா...

உண்மையான ஜீவன்

என் உயிர் தோழன்

என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண

காற்றில் கரைந்து விட்டாயே!

இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்!

இனி என் முருகனுக்கு யார்? துணை

விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்?

இனி அவனுக்கு

யார்? துணை..

யார்? துணை....

யார்? துணை......

இவ்வாறு செல்முருகன் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.