செல்போன்கள் கையிலிருக்கும் அணுகுண்டு: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து!

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் போன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களில்து சமூக வலைத்தளங்களும் ஒன்று. இண்டர்நெட் டேட்டாக்கள் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால் அனைவரும் செல்போன் மூலமே சமூக வலைத்தளங்கள் உள்பட அனைத்தையும் பார்த்து கொள்கின்றனர். செல்போன், இண்டர்நெட்டை பெரும்பாலானோர் ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலும் ஒருசிலர் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்துவதால் கடந்த சில ஆண்டுகளில் குற்றங்கள் அதிகரித்து கொண்டே போகிறது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடைபெற முக்கிய காரணமே சமூக வலைத்தளம் தான். சமூக வலைத்தளத்தை காதலுக்காகவும் காமத்திற்காகவும் பயன்படுத்தியதால் வந்த விளைவுதான் இந்த கொடூர சம்பவம். பல ஆண்டுகள் பழகியவர்களே இந்த காலத்தில் துரோகம் செய்து வரும் நிலையில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்புவதால் ஏற்படும் விளைவே இதுபோன்ற கொடூர சம்பவங்களுக்கு வழி வகுக்கின்றது.

இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்த வழக்கு ஒன்று இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது, 'மதுவும், ஆபாச படங்களும் சமூகத்தை மாசுப்படுத்தும் மிகப்பெரிய பிரச்னைகள் என்றும், செல்போனின் நன்மை, தீமை அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் நம் கையில் இருக்கும் செல்போன்கள் அணுகுண்டு போல பேராபத்தானவை என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இனிமேலாவது செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
 

More News

வெட்டி சாகடியுங்கள்: பொள்ளாச்சி குற்றம் குறித்து ஐஸ்வர்யா தத்தா

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் பலர் கடும் ஆத்திரத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா வீடியோ

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர்: இயக்குனர் சர்ஜூன் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' படத்திற்கு பின் அவர் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தேர்தலில் போட்டி: கமல் எடுத்த முக்கிய முடிவு!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்து, போட்டியிட விரும்புபவர்களிடம்

ஊடகங்கள் மீது மானநஷ்ட போடுவேன்: பார் நாகராஜன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகிய 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் வேறு யாரும் தொடர்புடையவர்கள் இல்லை