திரையரங்கில் ரிலீஸ் செய்யுங்கள்: அனுஷ்கா பட தயாரிப்பாளருக்கு சென்சார் அதிகாரிகள் கூறிய அறிவுரை

  • IndiaGlitz, [Wednesday,May 27 2020]

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியும் நடைபெறவில்லை. படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், புரமோஷன் பணிகள், சென்சார் பணிகள் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாததால் திரைத்துறையினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்

இந்த நிலையில் தற்போது இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அனுஷ்கா ஷெட்டி நடித்த ’சைலன்ஸ்’ என்ற திரைப்படம் சென்சார் ஆகி சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகியுள்ள ’சைலன்ஸ்’ திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு மொழி பதிப்புகள் மட்டும் சென்சார் ஆகியுள்ளது. சென்சார் அதிகாரிகள் தமிழ், தெலுங்கு மொழி ‘சைலன்ஸ்’ பதிப்பிற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ‘சைலன்ஸ்’ திரைப்படம் ஒடிடி பிளாட்பார்மில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில் தற்போது சென்சார் ஆகியுள்ளதால் இந்த திரைப்படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை இந்த படத்தின் இயக்குனரும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து பாராட்டியதோடு இந்த படத்தை முதலில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யுங்கள் என்று அறிவுரை கூறியதாகவும் இயக்குனர் ஹேமந்த் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்
 

More News

நாகர்கோவில் காசி கூறிய 12 பெண்கள் யார் யார்? பரபரப்பு தகவல்

நாகர்கோவில் காசி தன்னிடம் ஏமாந்த 12 பெண்களின் பெயரை கூறியுள்ளதாகவும் அந்தப் பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

2 வயதுக்கு குறைவான குழந்தையா??? மாஸ்க் போடாதீங்க... எச்சரிக்கை விடுக்கும் ஜப்பான் மருத்துவ சங்கம்!!!

ஜப்பான் நாட்டின் குழந்தை மருத்துவச் சங்கம் தற்போது நாடு முழுவதும் ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மூன்று முறை திருமணமான 62 வயது பெண்ணுடன் 26 வயது இளைஞர் காதல்!

மூன்று முறை திருமணமாகி மகன்கள், மகள்கள் பேரக் குழந்தைகள் இருக்கும் 62 வயது மூதாட்டி ஒருவரை 26 வயது இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரசிகரின் குறும்பான கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் அர்த்தமுள்ள பதில்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் வெகு அரிதாகவே ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடுவார் என்பதும் அந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

பிராமணர் சர்ச்சை, உச்சபட்ச ஆபாசம்: 'காட்மேன்' வெப்சீரீஸ் டீசர்!

திரைப்படங்களுக்கு இருப்பது போல் வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் பெரும்பாலான வெப்சீரிஸ்களில் ஆபாசம், வன்முறை ஆகிய காட்சிகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.