'புலி'க்கு வரிவிலக்கு ஏன் இல்லை? அதிகாரிகள் கூறிய காரணங்கள்

  • IndiaGlitz, [Saturday,October 03 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு மறுக்கப்பட்டது. தமிழில் பெயர் வைக்கப்பட்டும், யூ' சர்டிபிகேட் பெற்றபோதிலும் இந்த படத்திற்கு வரிவிலக்கு ஏன் மறுக்கப்பட்டது என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது இதற்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலி' படத்தை பார்த்த ஆறு அதிகாரிகள், இந்த படம் கேளிக்கை விலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என பரிந்துரை செய்த காரணங்கள் கீழ்வருமாறு:

1. புலி திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.

2. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன.

3. பாடல் காட்சிகளில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன

4. படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக்காட்சிகளில் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன

5. இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது பெண் குழந்தை கழுத்து வெட்டப்படுவது போன்ற காட்சிகள் உள்ளன.

மேற்கண்ட காரணங்களால் 'புலி' படம் வரிவிலக்கு பெற தகுதியில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் ஸ்ருதிஹாசன் பாடும் பாடல்

நேற்று முன் தினம் விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 'புலி' படத்தில் இடம்பெற்ற 'ஏண்டி ஏண்டி' பாடல் படத்தின் ரிலீஸுக்கு பின்னரும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

பாண்டவர் அணியை கமல் தூண்டிவிடுகிறார். சரத்குமார் குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் மனுதாக்கல் செய்து தேர்தல்...

கவுண்டமணியின் அதிரடி முடிவு

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுண்டமணி நடித்த '49 ஓ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில்,...

சிவா-சிவகார்த்திகேயன் கூட்டணி இணையுமா?

அஜீத் நடிப்பில் 'வேதாளம்' படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில்...

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் மகேஷ்பாபு?

இந்திய திரையுலகில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' என்றால் அது மிகையாகாது...