மறைந்த நடிகர் விவேக்கிற்கு மத்திய அரசு செய்ய போகும் மரியாதை!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற தகவல் தமிழ் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது

நடிகர் விவேக்கிற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17ஆம் தேதி அதிகாலையிலேயே அவர் மரணமடைந்தார். இதனை அடுத்து விவேக்கிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்றி வந்த விவேக், அவருடைய கோரிக்கையின்படி ஒரு கோடி மரங்களை நடும் முயற்சியில் இருந்தார். சுமார் 33 லட்சத்திற்கும் மேலாக அவர் மரங்களை நட்டு உள்ள நிலையில் திடீரென மரணம் அடைந்து விட்டார்

இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு உரிய மரியாதை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் மோடி ஆகியோர் நடிகர் விவேக் படம் போட்ட தபால்தலையை வெளியிடத் திட்டமிட்டு உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

படுக்கை காலி இல்லாததால் ஆம்புலன்ஸில் உயிரிழந்த 16 மாத குழந்தை: பெற்றோர் கதறலின் பரிதாப வீடியோ!

மருத்துவமனையில் படுக்கை காலி இல்லை என்பதால் 16 மாத குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டதால் ஆம்புலன்ஸில் காத்திருந்த அந்த குழந்தை பரிதாபமாக

சமரச பேச்சுவார்த்தை என்ன ஆச்சு? மீண்டும் நீதிமன்றம் செல்லும் 'இந்தியன் 2' வழக்கு!

'இந்தியன் 2' படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே.

கொரோனாவால் இறந்தவர் உடலை வாங்க மறுக்கும் உறவுகள்...! உதவிக்கரம் நீட்டும் இஸ்லாமிய அமைப்புகள்...!

கோவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, உறவினர்கள் வாங்க மறுத்ததால், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் உடல்களை அடக்கம் செய்து வருகின்றன.

மயிலாடுதுறை பேரூராட்சி பகுதியில் நாளை 144 தடை உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பேரூராட்சி பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாஸ் நடிகருக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

தெலுங்கு திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்