close
Choose your channels

ரஜினியின் கோரிக்கைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு: பரபரப்பு தகவல்!

Monday, June 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்ட கோரிக்கை ஒன்றுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது அமெரிக்கா சென்று தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது கொரோனா நேரத்தில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல அவர் முடிவு செய்தார், இதற்காக அவர் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு வந்த நிலையில் மத்திய அரசு அவருக்கு அனுமதி அளித்து விட்டதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து 14 பேர்கள் பயணம் செய்யும் சிறப்பு விமானத்தில் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தான் இருக்கிறார் என்பதால் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்ற உடன் தனுஷ் குடும்பத்தினர் ரஜினி குடும்பத்தினர்களுடன் இணைந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்திற்கு அமெரிக்காவில் மெடிக்கல் செக்கப் முடிந்த பிறகு ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் ஒரு சில நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.