close
Choose your channels

'இந்தியன் 2' விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய விஷால்!

Saturday, February 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் நடந்த ஒரு கோர விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உட்பட மூவர் பலியாகினர். இந்த விபத்து தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் கமலஹாசன், ஷங்கர், காஜல் அகர்வால் உட்பட பலர் நூலிழையில் உயிர் தப்பினார்கள் என்ற அதிர்ச்சியான செய்தி வெளிவந்து திரையுலகினரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இந்த விபத்துக்கு பின்னர் நடைபெறும் படப்பிடிப்பு அனைத்திலும் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஷால் நடித்து வரும் ’சக்ரா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கும் முன் விஷால் உள்பட படக்குழுவினர் அனைவரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் பலியான மூவருக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். இது குறித்த வீடியோ தற்போது விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சமூக வலைப்பக்கத்தில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், ஷராதா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்து வரும் சக்ரா படத்தை ஆனந்தன் எனப்வர் இயக்கி வருகிறார். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.