கொரோனா, எபோலாவைவிட கொடிய வைரஸால் புது ஆபத்து??? பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

 

கொரோனா, எபோலாவைவிட புது கொடிய வைரஸின் பாதிப்புகளைப் பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்க ஆரம்பித்தால் கொரோனாவை விட நிலைமை படு மோசமாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனாவை போலவே இந்த வைரஸும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்து உள்ளனர்.

எலி அதன் சிறுநீர், உமிழ்நீர் போன்றவற்றின் மூலம் பரவும் புதிய வைரஸ் பற்றிய பாதிப்புகளை அமெரிக்காவின் CDC வெளியிட்டு இருக்கிறது. இது ஏற்கனவே உலகில் பரவிய சப்பரே ரத்தக்கசிவு காய்ச்சல் மற்றும் எபோலா வைரஸ் காய்ச்சல் வகையைச் சார்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சப்பரே என்பது எலிகளினால் பரவக்கூடியது. இந்த நோய்ப்பற்றி உலக மக்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் பொலிவியாவில் இந்நோய்த்தொற்று தொடர்ந்து மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தித்தான் வருகிறது. மேலும் இந்த நோய்த்தொற்றும் பாதிக்கப்பட்ட வர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் கொண்டது.

அதேபோல எபோலாவும் எலிகளினால் பரவும் தன்மையைக் கொண்டது. எபோலா கடந்த 2004 ஆம் ஆண்டு பொலிவியாவில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த எபோலா பொலிவியாவில் ஆரம்பித்து பின்னர் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி பல்லாயிரக் கணக்கான மக்களை காவு வாங்கியது.

மேலும் சப்பரே, எபோலா இரண்டும் ஏறக்குறைய ஒரே தன்மை கொண்ட அரேனா வைரஸ் மூலம் பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது இந்த அரேனா வைரஸ் மூலம் பரவும் புதிய நோய்த்தொற்றை அமெரிக்காவின் CDC வெளியிட்டு இருக்கிறது. இந்நோய்த்தொற்று எதிர்காலத்தில் பெரும் தலைவலியாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். ஏற்கனவே கொரோனாவின் இரண்டாம் அலையைக் குறித்து கடும் பீதியைக் கிளப்பும் விஞ்ஞானிகள் தற்போது எலிகளினால் பரவும் புதிய வைரஸ் பற்றிய அச்சத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

More News

கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணுங்க: நெட்டிசனுக்கு சாட்டையடி பதில் கொடுத்த குஷ்பு!

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சென்ற கார் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் இந்த விபத்து குறித்து கேலி செய்து டுவீட் ஒன்றை பதிவு செய்த நெட்டிசனுக்கு 'கொஞ்சமாவது

லாஸ்லியா தந்தை மரணம் எப்படி நேர்ந்தது? கனடா அரசின் பிரேத பரிசோதனை சான்றிதழ்!

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற இலங்கை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மரணம் அடைந்தார்.

தனுஷ் படத்தில் வாய்ப்பு கிடைக்க கொரோனா தான் காரணம்: மாளவிகா மோகனன்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன் என்பது தெரிந்ததே.

இரு பிரிவுகளாக பிரிந்த 'அண்ணாத்த' டீம்: ரிலீஸ் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.

பிரபாஸின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தன்ஹாஜி' என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி