’குக் வித் கோமாளி சீசன் 5’.. வெங்கடேஷ் பட் கூறிய அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் திடீர் திருப்பமாக ’குக் வித் கோமாளி’ ஐந்தாவது சீசனில் நான் பங்கேற்க போவதில்லை என நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் தனது முகநூலில் ‘குக் வித் கோமாளி சீசன் 5’ தொடங்குவது குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. நான் இந்த சீசனில் நடுவராக தொடர்வேன் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் ஐந்தாவது சீசனில் நான் பங்கேற்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் உள்பட பல லட்சம் பேர் மகிழ்ச்சியுடன் பார்த்த இந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து நான் சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஜாலியான பக்கத்தை காட்டிய ஒரு நிகழ்ச்சியான ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது. 24 ஆண்டுகளுக்கு மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் மற்ற வாய்ப்புகளை நோக்கி செல்ல முடிவெடுத்து உள்ளேன்.

’குக் வித் கோமாளி நிகழ்ச்சி’ இயக்குனர் உள்பட அனைவருக்கும் என்னுடைய நன்றி, பலரது மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ’குக் வித் கோமாளி’ ஒரு சிறந்த நிகழ்ச்சியாக அமைந்திருந்தாலும் அதில் பங்கேற்க முடியாது என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். இருப்பினும் இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.

விரைவில் வர இருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சி என்ன என்பதை யூகித்து கொண்டிருங்கள். நன்றி! என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

2024 குரு பெயர்ச்சி பலன்கள்: யாருக்கு யோகம்? யாருக்கு கஷ்டம்?

பொதுவான பலன்கள்: மங்களகரமான ஆண்டு: வளர்ச்சி, செழிப்பு, புதிய தொடக்கங்கள் சமூக நலத்திட்டங்கள்: அரசாங்கத்தால் அதிக கவனம் கல்வி: கல்வி வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் வேளாண்மை: விவசாயிகளுக்கு நல்ல பலன்கள்.

மாசி மகம்: 7 ஜென்ம பாவங்களைப் போக்கும் புனித தினம்!

மாசி மகம் என்பது இந்து மதத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். 7 ஜென்ம பாவங்களைப் போக்கும் தினமாகக் கருதப்படும் இந்நாளில், புனித நீராடல், விரதம், வழிபாடு போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் !!

Do. Creative Labs  தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித்

'உன்னை உயிரோடு கொண்டு போய் சேர்க்குறது என் பொறுப்பு: 'ஜோஷ்வா இமைபோல் காக்க' டிரைலர்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவான 'ஜோஷ்வா இமை போல் காக்க' என்ற திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன்

 விஷமத்தனமாக பரப்பப்படும் செய்திகள்: தவெகா புஸ்ஸி ஆனந்த் அறிக்கை..!

தமிழக வெற்றிக் கழகம் குறித்து விஷமத்தனமான செய்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அந்த செய்திகளை நம் கட்சியின் தொண்டர்கள் நம்ப வேண்டாம் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்