திறக்கப்படுகிறது செம்பரப்பாக்கம் ஏரி: 2015 திரும்புமா?

வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் காரணமாக நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக வேகமாக முழு கொள்ளளவை நோக்கி நிரம்பி கொண்டிருந்த நிலையில் தற்போது நிவர் புயலால் பெய்த மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சற்றுமுன் செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 22 அடியாக உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் 22 அடி நிரம்பிவிட்டால் நீர் திறந்துவிட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி செம்பரம்பாக்கம் ஏரி இன்று பகல் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி பகல் 12 மணி அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளாதால் ஏரி திறக்கப்படுவதை பார்க்க அதிகளவில் வரும் மக்கள் கூட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறந்துவிட்டாலும் கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் போல் இந்த முறை சென்னைக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News

சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு: நிவர் குறித்து கவிப்பேரரசு கவிதை!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

சம்யுக்தாவுக்கு ஒரு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய கால் சென்டர் டாஸ்க்கில் சனம் மற்றும் சம்யுக்தா காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சனம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறிய சம்யுக்தா, 'வளர்ப்பு சரியில்லை'

டாஸ்க்கில் விட்டுக்கொடுத்த கேபி: பாலாஜி சொன்னது உண்மைதானா ?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் குரூப்பில் சோமசேகர், ரியோ மற்றும் கேபி இருப்பதாக நேற்று பாலாஜி சொன்னதை இன்றைய டாஸ்க்கில் கேபி மற்றும் சோம் நிரூபித்துக் காட்டியுள்ளனர் 

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா?

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'தளபதி 65' திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது 

இப்படி ஒரு போஸ் தேவையா? பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.