'செம்பருத்தி' படப்பிடிப்பு: முதல் நாளிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக்-ஷபானா

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’செம்பருத்தி’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக செம்பருத்தி உள்பட அனைத்து தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

அந்த வகையில் ’செம்பருத்தி’ சீரியலின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த சீரியலில் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே இந்த சீரியலின் இயக்குனர் ரவிபாண்டியனுக்கு பிறந்த நாள் என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் பெரிய பங்களாவிலேயே இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இயக்குனர் ரவி பாண்டியன் கேக் வெட்டி நாயகன் கார்த்திக், நாயகி ஷபானா உள்பட அனைவருக்கும் பகிர்ந்தார். படக்குழுவினர், டெக்னீஷியன்கள் என அனைவரும் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முதல் நாள் படப்பிடிப்பிலேயே கார்த்திக், ஷபானா உள்பட அனைவரும் இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அனுபவித்து மகிழ்ந்தனர். செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு தொடங்கி விட்டதால் இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பு தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கட்டிலுக்கு மேலே கணவன், கீழே 3 நாட்களாக பிணமாக மனைவி: போலீசாரை அதிர வைத்த சம்பவம்

கட்டிலுக்குக் கீழே மனைவி பிணமாக இருக்கும் நிலையில் கட்டிலுக்கு மேலே கணவர் மூன்று நாட்கள் படுத்து தூங்கிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ரகசியத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா: வைரலாகும் புகைப்படம்

பிரபல பின்னணி பாடகியும், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான ரம்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே

பட வாய்ப்புக்காக படுக்கை பகிர்வு: அதிர்ஷ்டத்தால் தப்பியதாக தமிழ் நடிகை பேட்டி

பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரையுலகில் இருப்பதாக தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமன்றி, இந்தியத் திரையுலகில் மட்டுமன்றி,

கொரோனா பரவல்: குழந்தைகளின் மனநலனைக் காக்க என்ன செய்யலாம்???

கொரோனா உலக மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

ஐஸ்வர்யாராயுடன் மீண்டும் இணையும் விக்ரம்: செப்டம்பரில் படப்பிடிப்பு?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ராவணன்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்