கஞ்சா விருந்தில் கலந்து கொள்ள ஆன்லைனில் முன்பதிவு: 7 பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது!

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற கஞ்சா விருந்தில் கலந்து கொண்ட 7 இளம்பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் மது, கஞ்சா விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் அந்த ரிசார்ட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது 7 பெண்கள் உள்பட 160 பேர் மது, கஞ்சா உள்பட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்தி தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் ஐடி பணியாளர்கள் என்றும் வார இறுதியை ஜாலியாக கழிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்து ஓரிடத்தில் இணைந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட 160 பேர்களையும் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு சொந்தமான உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

More News

கர்ப்பிணி நடிகைக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டணம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தெறி', 'தங்கமகன்', 2.0' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை எமிஜாக்சன்

ஸ்டண்ட் சில்வாவுக்கு கிடைத்த பெருமைக்குரிய விருது!

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சில்வா, தமிழ் திரையுலகில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இனி கார்ஃபைடு கல் வேண்டாம்! பழங்கள் பழுக்கவைக்க வந்தது புது டெக்னிக்! வியாபாரிகள் மகிழ்ச்சி!

பழ சந்தைகளில் உடனடியாக பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்ஃபைட் கற்களை வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். இதனால் உடலுக்கு அதிக அளவு தீங்கு உள்ளது என்பதை அறிந்தும்

10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம்! பணத்திற்காக அரங்கேறிய அவலம்!

பணத்திற்கு ஆசைப்பட்டு, 10 வயது மகளை 40 வயதாகும் நபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த, கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்...

இனி "தலப்பாகட்டி பிரியாணியை" பயன்படுத்த கூடாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உணவு பிரியர்களை பொறுத்தவரை, பல பிரியாணி கடைகள் இருந்தாலும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையை தேடி சென்று சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர்...