close
Choose your channels

சென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்!

Monday, June 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஜிம் ஒன்றிற்கு சென்ற இளம் பெண்ணிடம் அதன் பயிற்சியாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். அதோடு பரங்கிமலை காவல்துறை ஆணையரிடம் அந்தப் பெண் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, தாம்பரம் அடுத்து கேம்ப் ரோட்டில் செயல்பட்டு வரும் ஜிம் ஒன்றை அதன் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் யாருக்கும் தெரியாமல் திறந்துள்ளார். அப்படி திறந்த ஜிம்மில் பெண்கள் பலர் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இதையடுத்து கடந்த வாரம் தனியாக இருந்த ஒரு இளம்பெண்ணிடம் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அப்பெண் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனக்கு நேர்ந்ததைப் போல வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் அப்பெண் கூறி இருக்கிறார். இந்தப் பதிவைப் பார்த்த பிரேம் ஆனந்த் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு சமாதானம் பேசி இருக்கிறார். இதையடுத்து அப்பெண் தற்போது பரங்கிமலை காவல்துறை ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.