சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி!

  • IndiaGlitz, [Tuesday,January 19 2021]

புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் சமூக சேவகியுமான டாக்டர் சாந்தா அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்து, சமூக சேவை செய்து வந்த டாக்டர் சாந்தா அவர்கள் சமீபத்தில் இதய நோய் சம்பந்தமான சிகிச்சை பெற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து டாக்டர் சாந்தாவின் உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் பொதுமக்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் சாந்தா அவர்கள் மகசேசே, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் இந்த விருதுகளில் கிடைத்த பணம் முழுவதையும் அவர் மருத்துவ ஆராய்ச்சிக்காக செலவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் சாந்தா அவர்களின் தாத்தாவின் சகோதரர் தான் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் என்பதும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் சம்பந்தமாக பல ஆராய்ச்சி கட்டுரைகளை டாக்டர் சாந்தா எழுதியுள்ளார் என்பதும் இந்த கட்டுரைகள் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 22 பேர்…. 7 நாட்களுக்குப் பின் பலர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!

சீனாவின் ஷாண்டோய் மாகாணத்தில் உள்ள யான்டாய் பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி கொண்டு தேர்தல் பிரசாரமும் செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்

மேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே 

விழா மேடையில் இருந்த சரஸ்வதி படத்தால் இலக்கிய விருதையே உதறித் தள்ளிய கவிஞர்!

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற இருந்த மராட்டிய மூத்த கவிஞர் ஒருவர் விழா மேடையில் சரஸ்வதி படம் வைக்கப்பட்டு இருந்ததால் விருதையே வேண்டாம் என உதறி இருக்கிறார்.

மொபைல் போனால் குழந்தைக்கு கண் பார்வையைத் தவிர இத்தனை சிக்கலா? விளக்கம் அளிக்கும் வீடியோ!

பொதுவா கண் பார்வை பாதிக்கப்படும்  என்ற நோக்கத்தில்தான் நாம் மொபைல் போன்களை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம் எனச் சொல்கிறோம்.