close
Choose your channels

பப்ஜிக்கு அடிமையாகி பணத்திற்காக பாட்டியை கொன்ற சென்னை இளைஞர் கைது!

Thursday, February 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பாட்டியை கொலை செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த ஆவடி பகுதியை சேர்ந்த 20 வயது கோகுல். இவரும் இவரது தாயாரும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர் இவரது குடும்பம் கோகுல் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தது.

இந்த நிலையில் கோகுலுக்கு பப்ஜி விளையாட்டின் மீது திடீரென ஈர்ப்பு வந்தது. இரவு பகல் பாராமல் அந்த விளையாட்டை அவர் விளையாடி கொண்டிருந்தார். வேலைக்கும் போகவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் வீட்டின் உரிமையாளர் வாடகை கொடுக்காததால் வீட்டில் உள்ள பாத்திரம் பண்டங்களை தூக்கி எறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுல், அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் திருட முயற்சி செய்துள்ளார்.

நள்ளிரவு 12 மணிக்கு தனது நண்பனை அழைத்து கொண்டு பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். பாட்டி கொடுக்க மறுத்ததை அடுத்து அவரை கொலை செய்து விட்டு பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளார். மறுநாள் திருடிய நகைகளை அடகு வைத்து உள்ளார். அடக்குக்காரர் கொடுத்த தகவலின் பேரில் கோகுலை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி தற்போது தாயாரையும் தவிக்கவிட்டு சிறையில் கம்பி எண்ணுகிறார் கோகுல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.