திரும்பி வருவோம்னு சொன்னோம் இல்ல? தல தோனியின் உற்சாகமான பேச்சு!


கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆப்க்கே தகுதிப்பெறாமல் பாதியில் வெளியேறியது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் 2021 ஐபிஎல் போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று முதல் ஆளாக ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதிப் பெற்றிருக்கிறது சிஎஸ்கே.

இதனால் சிஎஸ்கே கேப்டன், அதன் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் உற்சாகத்தில் திளைத்து வருவதைப் பார்க்க முடிகிறது. நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்றார். ஆனால் அவர் பவுலிங்கை தேர்வு செய்ததால் ஹைத்ராபாத் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்தது.

பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே டுபிளசிஸ் மற்றும் கெய்க்வாட் கூட்டணி 3 ஓவர் வரையில் பொறுமை காத்து பின்னர் அதிரடி காட்டினர். அடுத்துவந்த மொயின் அலி, ருத்ரவாஸ், சுரேஷ் ரெய்னா என எல்லோரும் அணியின் ரன் ரேட்டிங்கை கணிசமாக உயர்த்திய நிலையில் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது கேப்டன் தோனி தனது பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அணியை வெற்றிப்பெற செய்தார். இதனால் 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை குவித்தனர்.

நேற்றைய வெற்றிக்குறித்துப் பேசிய தல தோனி “கடந்த சீசனில் நாங்கள் அதிக ஆபத்தில் இருந்தோம். மீண்டும் வலுவாக திரும்பி வர வேண்டும் என்று கூறினோம். இந்த ஆண்டு நாங்கள் அதைச் செய்துள்ளோம். அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவுலிங், பேட்டிங் என அனைத்து துறைகளையும் சமநிலையில் வைத்திருப்பதற்கான பொறுப்புகளை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.

அணியின் இந்த நிலைக்கு வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்ஸ்க்கு முழு கிரெடிட் செல்ல வேண்டும். கடந்த 2020 சீசனில் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தோம். அப்போதும் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இந்த முறை அவர்களின் நம்பிக்கையை திருப்பிச் செலுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தோனி கூறினார்.

தல தோனி சிஎஸ்கே வெற்றிக்குறித்து பேசியபோது ரசிகர்களைப் பற்றியும் பேசியதால் சிஎஸ்கே ரசிகர்கள் படு உற்சாகத்தில் திளைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

லண்டனில் அறுவை சிகிச்சை… விபத்து குறித்த நடிகர் சித்தார்த் கூறிய விளக்கம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சித்தார்த்.

'பீஸ்ட்' அப்டேட் தந்த அனிருத்: விஜய் ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கமிருக்க விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் 'பீஸ்ட்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள்

இன்னும் காலம் ஆகாதவர்: சிவாஜி கணேசன் குறித்து கமல்ஹாசன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது நினைவுகளை திரையுலகினர் பலர் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் சற்று முன்னர் நடிகை குஷ்பு

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'காத்து வாக்குல ரெண்டு காதல்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால்

உடல்எடையை குறைத்தது எப்படி? ரகசியத்தை ஷேர் செய்த நடிகை குஷ்பு!

80கள் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இளசுகள் முதல் பெருசு வரை,  பலரின் கனவு நாயகியாக இருந்துவருபவர் நடிகை குஷ்பு. நடிகை, அரசியல் தலைவர், சினிமா தயாரிப்பாளர்,