close
Choose your channels

கொசு மருந்தை அருந்தியதால் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுவன்!

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்துவந்த 3 வயது சிறுவன் தவறுதலாக ஆல் அவுட் மருந்தை அருந்தியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள பம்மல் பகுதியில் வசித்துவருபவர் தமிழரசன். இவருடைய 3 வயது ஆண் குழந்தை கிஷோர். பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் திடீரென அங்கிருந்த ஆல் அவுட் மருந்தை குடித்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் உடனடியாக தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவர்கள் எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தனர். ஆனால் எழும்பூர் மருத்துவமனைக்குச் சென்றும் குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் முதலில் சிகிச்சைக்கு சென்ற தனியார் மருத்துவமனையின் மருத்துவர் கிஷோர் மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் போலி சான்றிதழை வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கர் நகர் போலீசார் சாய் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர் சுபாஷ் என்பவர் மீது புகார் பதிவு செய்ததோடு அவரை தேடி வருகின்றனர். ஆனால் மருத்துவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.