close
Choose your channels

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

Tuesday, July 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று மாதங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் ஓரளவுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது

இந்த நிலையில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள், காவல்துறையின,ர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.