close
Choose your channels

சென்னை கல்லூரி மாணவி திடீர் தற்கொலை: செல்போன் காரணமா?

Friday, September 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் அதிகநேரம் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரது மகள் பத்மாவதி தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில் செல்போனில் அதிக நேரம் விளையாடாமல் தேர்வுக்கு படிக்குமாறு பெற்றோர்கள் கண்டித்ததாக தெரிகிறது

இதனை அடுத்து மனமுடைந்த பத்மாவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் தூக்கில் தொங்க முயற்சிப்பதை பெற்றோர்கள் பார்த்து உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பத்மாவதியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர்கள் கதறி அழுத காட்சி கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது

பத்மாவதி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். செல்போனில் அதிகநேரம் விளையாட வேண்டாம், தேர்வுக்கு படி என்று பெற்றோர்கள் அறிவுரை கூறியதை தவறாக எடுத்து கொண்ட கல்லூரி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.