close
Choose your channels

அவர் என் அண்ணன் போன்றவர்: பாலியல் புகார் கொடுத்த சென்னை கல்லூரி மாணவி திடீர் பல்டி

Saturday, July 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மாநகராட்சியில் பொறியாளராக பணி செய்துவரும் கமலக்கண்ணன் என்பவர் தன்னிடம் பாலியல் தொல்லை செய்வதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் திடீரென கமலகண்ணன் தன்னுடைய அண்ணன் போன்றவர் என்றும், அவர் தவறானவர் இல்லை என்றும் கல்லூரி மாணவி பல்டி அடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை ராயபுரம் மண்டலத்தில் உதவி செயற் பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் கமலக்கண்ணன். இவர் கொரோனா தன்னார்வ பணியில் இருக்கும் கல்லூரி மாணவி ஒருவரிடம் ஆபாசமாக தொலைபேசியில் பேசியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. கமலக்கண்ணன் பேசிய ஆடியோவும் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கமலக் கண்ணனை தேடி வந்தனர். மேலும் சென்னை மாநகராட்சியும் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென கல்லூரி மாணவி தனது வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகாரை திரும்பப் பெருவதாக கூறியுள்ளார். மேலும் கமலக்கண்ணன் தன்னுடைய அண்ணன் போன்றவர் என்றும், அவர் தன்னிடம் தவறாக எதுவும் நடக்கவில்லை என்றும், தன்னுடைய எதிர்கால வாழ்க்கை மற்றும் படிப்புக்கான ஆலோசனை மட்டுமே வழங்கினார் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது

ஆனால் இதனை ஏற்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதுகுறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் தலைமறைவாக இருக்கும் கமலக்கண்ணனை நாங்கள் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவோம் என்றும் அதன் பின்னர் நீதிமன்றத்தில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று காவல்துறையினர் கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கமலக்கண்ணன் மீது கொடுத்த பாலியல் புகாரை திரும்பப் பெறும்படி கல்லூரி மாணவி வற்புறுத்தப்பட்டு இருக்கலாம் அல்லது மிரட்டப்பட்டு இருக்கலாம் என்றும் அதனால் அந்த மாணவி தற்போது பல்டி அடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தலைமறைவாக இருக்கும் கமலக்கண்ணன் பிடிபட்டால் மட்டுமே மற்ற உண்மைகள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.