சென்னை விடுதிகள் திடீர் சோதனை. கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து வரும் நிலையில் இந்த நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டுப்பெற விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் தங்கும் விடுதிகளில் சமூக விரோதிகள், குற்றப்பின்னணி உள்ள நபர்கள் இருந்தால் உடனடியாக கைது செய்யவும் காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் சென்னையில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

More News

எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி எதிரொலி. கூவத்தூர் செல்கிறார் சசிகலா

கூவத்தூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மாமர்மம். பார்த்திபனின் அரசியல் கவிதை

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி கமல்ஹாசன், விசு, கங்கை அமரன் போன்ற திரையுலகினர்களும் தைரியமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் செய்ய வேண்டிதை செய்வோம். சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே வருவதாக கூறப்படும் நிலையில்...

ஓபிஎஸ்- மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு. நேரில் ஆதரவு தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் முதல் கேபினட் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் தனது ஆதரவை தெரிவித்தார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும். பிரபல அரசியல் கட்சி தலைவர்

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.