close
Choose your channels

வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த முக்கிய பதவி!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது என்பதும் இதில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்றது என்பதும் தெரிந்ததே

குறிப்பாக நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டனர் என்பதும் இந்த போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி அடைந்து வரலாற்று சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. ஒருபக்கம் நடராஜன் பந்துவீச்சில் அசத்திய வந்த நிலையில் இன்னொரு பக்கம் வாஷிங்டன் சுந்தர் ஆல்-ரவுண்டராக அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி முக்கிய பதவி ஒன்றை அளித்துள்ளது

இதுகுறித்து சென்னை மாநகராட்சி பதிவு செய்துள்ள டுவிட்டில், ‘சென்னை மாவட்டத்தின் தேர்தல் விழிப்புணர்வு தூதராக வாஷிங்டன் சுந்தரை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 100% தேர்தலில் வாக்களிக்க உறுதியேற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமனம் செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.