4000ஐ தாண்டிய ராயபுரம், 3000ஐ தாண்டிய தண்டையார்பேட்டை: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டிவிட்டது என்பதும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3000ஐ தாண்டிவிட்டது என்பதும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சற்றுமுன் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 23,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 4023பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தண்டையார்பேடை மண்டலத்தில் 3019 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2646 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2539 பேர்களும், திருவிக நகர் மண்டலத்தில் 2273 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 2068 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1325 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1088 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர் ஆகிய ஆறு மண்டலங்களில் மிக அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதால் இந்த ஆறு மண்டலங்களில் சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன

More News

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: ஆல் பாஸ் என முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இது குறித்த வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு

இந்திய - சீன எல்லையில் நடப்பது என்ன??? சீன வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்!!!

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த மாதத்தின் தொடக்கம் முதலே சீன இராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது.

குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் பிரபல நடிகையின் அழகு வீடியோ!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா.

கல்லூரி மாணவரை ஏமாற்றி ரூ.97 ஆயிரம் மோசடி செய்த இளம்பெண்: டிக்டாக்கால் விபரீதம்

23 வயது கல்லூரி மாணவர் ஒருவரிடம் அன்பாக பேசி அவரை ஏமாற்றி 97 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்த இளம்பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

'தலைவன் இருக்கின்றான்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக