close
Choose your channels

ரஜினியின் துக்ளக் விழா பேச்சு: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Wednesday, March 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் இதழ் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறியதாக திராவிடர் விடுதலை கழகம் வழக்கு பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ரஜினியின் பேச்சு கொடுத்து விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதாக கூறப்பட்ட புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திராவிடர் கழகம் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் ரஜினி மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறைக்கு சென்னை இரண்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து திராவிடர் விடுதலை கழகம் புகார் குறித்து போலீசார் விரைவில் காவல்துறையினர் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos