close
Choose your channels

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர்… தலைமை செய்தது என்ன?

Tuesday, May 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தை திமுகவினர் சிலர் அடித்து நொறுக்கியதாகச் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த அரசியல் பிரபலங்கள், நட்சத்திரகள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அம்மா உணவகத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தி இருப்பது வருத்தமளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். சென்னை முகப்பேரு சாலையில் நடந்து சென்ற திமுக தொண்டர்கள் பலர் மதுரவாயல் தொகுதி வெற்றியைக் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை தொடர்ந்து ஜேஜே நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் சிலர் தொண்டர்கள் உள்ளே நுழைந்து அம்மா உணவகத்தின் பெயர் பலகையை இங்கு தொங்க விடக்கூடாது என்று மிரட்டியதாகவும் மேலும் அங்கு மதியம் சமைப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை கட்சியில் இருந்து நீக்கியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து பதவியேற்பு விழா நடைபெறுவதற்குள் இப்படியொரு சம்பவமா என இந்தச் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.