எண்ணூர் அருகே மோதிய கப்பல்கள் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

சென்னை அருகே உள்ள எண்ணூரில் கடந்த வாரம் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிய விபத்தில் ஒரு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் டன் கணக்கில் கடல்நீருடன் கலந்தது. இதனால் எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரையிலான கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மிதந்து வருகிறது.
இதனால் கடல்வாழ் உயிரினங்கள் லட்சக்கணக்கில் பாதிப்பு அடைந்துள்ளதால் எண்ணெயை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணமாக இரண்டு கப்பல்களையும் சிறைபிடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்த ஐகோர்ட், விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் சிறைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்து உடனடியாக டான் காஞ்சிபுரம், பி.டபில்யூ மாப்பிள் ஆகிய இரண்டு கப்பல்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பல்கள் எண்ணூர் துறைமுக எல்லைக்குள் நிறுத்தப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கு விஷாலை முன்மொழிந்த கமல்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த விஷாலை, சங்கத்தின் நிர்வாகிகள் இன்று காலை சஸ்பெண்டை ரத்து செய்த செய்தியையும், அதனையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் செய்தியையும் சற்று முன்னர் பார்த்தோம்

அஜித்தின் 'விவேகம்' டீசர் ரிலீஸ் எப்போது?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏறபடுத்திவிட்டது

தன்னிகரில்லா தமிழக முதல்வர் பெயரில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சஸ்பெண்ட் ரத்தை அடுத்து விஷால் எடுத்த அதிரடி முடிவு

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் விஷாலை இன்றுக்குள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது என்பதை சற்று முன் பார்த்தோம்.

சென்னை மெரீனா: 144 தடை உத்தரவை மீறுவார்களா ஸ்டாலின் - சசிகலா?

சென்னை மெரீனாவில் மாணவர்களின் எழுச்சி போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இம்மாதம் 12ஆம் தேதி வரை மெரீனாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.