செளந்தர்யா ரஜினி விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'விஐபி 2' படத்தின் இயக்குனருமான செளந்தர்யா, கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் விசாரணை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி செளந்தர்யா, அஸ்வின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 4ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

More News

மனைவி புகார் எதிரொலி: தாடி பாலாஜி மீது கொலைமிரட்டல் வழக்கு

கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்த நிலையில் கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் நித்யா புகார் ஒன்றை அளித்தார்.

பஞ்சாயத்து தேர்தலுக்காக பக்காவாக தயாராகும் விஜய்

இளையதளபதி விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அரசியலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வரும் நிலையில் விஜய் அதிரடியாக அரசியல் களத்தில் இறங்க தயாராகிவிட்டார்.

'வேலைக்காரன்' படத்தை முந்தியது மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதமுள்ளது.

நான் தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன்: ராம்கோபால் வர்மா

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா தனது டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருபவர் என்பது தெரிந்ததே

இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன். கமல்ஹாசன்

கடந்த 1ஆம் தேதியில் இருந்து ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தது. ஆனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியும் சேர்ந்து கொண்டதால் ஒருசில துறையினர் இரட்டை வரி என்ற கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்