close
Choose your channels

திருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்!

Tuesday, October 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமான 3 மாதத்தில் சென்னை இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையை சேர்ந்த பல்லாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருடன் கல்லூரியில் படித்த ஸ்டெல்லா என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மூன்று வருடமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெங்கடேசன்-ஸ்டெல்லா திருமணம் நடந்தது

இதன் பின்னர் இருவரும் தனியாக வீட்டில் வசித்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்டெல்லா குளித்துவிட்டு படுக்கை அறையில் உடைமாற்ற சென்ற போது பல மணி நேரங்களாக வெளியில் வரவில்லை என தெரிகிறது. இதனால் வெங்கடேசன் சந்தேகப்பட்டு கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை. இதனை அடுத்து அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஸ்டெல்லா மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது

இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விரைந்து வந்து ஸ்டெல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வெங்கடேசனிடம் விசாரணை செய்து வருகின்றனர்

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.