திருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்!

  • IndiaGlitz, [Tuesday,October 20 2020]

திருமணமான 3 மாதத்தில் சென்னை இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையை சேர்ந்த பல்லாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருடன் கல்லூரியில் படித்த ஸ்டெல்லா என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மூன்று வருடமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெங்கடேசன்-ஸ்டெல்லா திருமணம் நடந்தது

இதன் பின்னர் இருவரும் தனியாக வீட்டில் வசித்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்டெல்லா குளித்துவிட்டு படுக்கை அறையில் உடைமாற்ற சென்ற போது பல மணி நேரங்களாக வெளியில் வரவில்லை என தெரிகிறது. இதனால் வெங்கடேசன் சந்தேகப்பட்டு கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை. இதனை அடுத்து அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஸ்டெல்லா மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது

இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விரைந்து வந்து ஸ்டெல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வெங்கடேசனிடம் விசாரணை செய்து வருகின்றனர்

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

முதல்வரை சந்திக்கும் திரையரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன என்பது தெரிந்ததே. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள்

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் சமீபத்தில் காலமானதை அடுத்து முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் 

அர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் 15 போட்டியாளர்களும் அதன்பின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனாவும் வருகை தந்தனர்

80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்!!!

தமிழகத்தைச் சார்ந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார்

எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் படலம் முடிந்தவுடன் ஆரி மற்றும் சோம்சேகர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் இடையில் நின்று கொண்டிருந்த அனிதா பொங்கி எழுந்தார்