close
Choose your channels

தர்பார் பட விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கில் திடீர் திருப்பம்

Monday, February 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்த போதிலும் ஒரு சில விநியோகஸ்தர்கள் இந்த படம் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை கொடுத்ததாக கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் வீடுகளின் முன்பு அவர்கள் போராட்டம் செய்து நஷ்ட ஈடு கோரினார்கள். இது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் விநியோகிஸ்தர்கள் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் இதனை அடுத்து தனது வீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என்றார் முருகதாஸ் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருந்த நிலையில் தற்போது திடீரென ஏ ஆர் முருகதாஸ் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என ஏ ஆர் முருகதாஸுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.