தனி அதிகாரி விவகாரம்: விஷால் வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது

இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் 'தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்தவே தமிழக அரசு தனி அதிகாரியை நியமனம் செய்திருப்பதாகவும், இந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் விஷால் கோரிக்கை வைத்திருந்தார்

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட் இதுகுறித்து வரும் 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.