close
Choose your channels

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி: சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

Friday, May 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக என். சேகர் என்பவரை நியமனம் செய்தது. இந்த நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தனி அதிகாரி தனக்கு உதவியாக செயல்பட பாரதிராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட தற்காலிக குழுவை நியமனம் செய்தார். இந்த குழுவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கதிரேசன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஒன்பது பேர் கொண்ட குழுவின் நியமனத்திற்கு தடை விதிக்குமாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தற்காலிக குழு நியமனத்தை எதிர்த்த வழக்கை அடுத்த வாரத்துக்கு சென்னை ஐகோர்ட்
ஒத்திவைத்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.