close
Choose your channels

'காப்பான்' படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Thursday, September 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கிய ’காப்பான்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதையை தன்னுடைய கதை என்றும், தான் இயக்குனர் கேவி ஆனந்திடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூறிய கதையை அவர் ’காப்பான்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து விட்டார் என்றும், எனவே இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்றும் ஜான் சார்லஸ் என்ற எழுத்தாளர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது ’ஜான் சார்லஸ் என்பவர் தனக்கு யார் என்றே தெரியாது’ என்று கேவி ஆனந்த் கூறியதை அடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே ’காப்பான்’ திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகும் என்று உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் நேற்று திடீரென எழுத்தாளர் ஜான் சார்லஸ் ’காப்பான்’ திரைப்படத்துக்கு தடை கோரி மேல்முறையீட்டு மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த மனு சற்றுமுன் விசாரணைக்கு வந்த போது ’தன்னுடைய கதை எனக்கூறி ’காப்பான்’ திரைப்படத்துக்கு எதிராக ஜான்சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ‘காப்பான்’ திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என்றும் அறிவித்தது. இதனையடுத்து ’காப்பான்’ படம் நாளை வெளியாக உள்ளது 100% உறுதிசெய்யப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.