close
Choose your channels

சிம்பு தொடரந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ்

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசாரதவன்' என்ற படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்து படுதோல்வி அடைந்தது. இந்த படம் குறித்து ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்களை சிம்பு மீது தயாரிப்பாளரும் இயக்குனரும் தெரிவித்திருந்தனர.

இந்த நிலையில் 'அன்பானவன் அடங்காதவன் அசாரதவன்' பட விவகாரத்தில் தம்மை பற்றி அவதூறான கருத்துக்கள் பரவி வருவதாக சிம்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவிடக்கோரி சிம்பு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இதுகுறித்து வரும் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அன்பானவன் அடங்காதவன் அசாரதவன்' பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.