ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்க்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் இன்று சென்னையில் திறக்கப்பட்டது என்பதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த இந்த நினைவகத்தை பார்க்க லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மெரினாவில் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் என்ற வீட்டை நினைவு இல்லமாக சமீபத்தில் மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவிற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெயலலிதா நினைவு இல்லத்தை நாளை திறக்க திட்டமிடப்பட்டு நிலையில் அந்த இல்லத்தை திறக்க எந்தவித தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் வேதா நிலைய சாவியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் வேதா நிலையம் திறக்கப்பட உள்ளதை அடுத்து பொதுமக்கள் பார்வையிட ஆவலாக இருந்த நிலையில் இந்த தடை உத்தரவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

'அண்ணாத்த' படத்தை முந்துகிறதா 'தளபதி 65?

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள 'தளபதி 65' திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு முன்பாக வெளிவர வாய்ப்பு

ஹரி-அருண்விஜய் படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் அருண் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதும் அருண் விஜய்யின் 33வது படமான இந்த படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த படம்

விமான விபத்தில் 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! பரிதாப சம்பவம்!

தென் அமெரிக்க நாடானா பிரேசிலில் நடைபெற்ற ஒரு சிறிய ரக விமான விபத்தில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

தீரன்பட பாணியில் செயல்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? வடமாநிலக் கும்பலா?

சீர்காழியில் 2 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்பவர்கள் கோமாளிகள்: தமிழ் ஹீரோ ஆவேசம்!

போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சொல்பவர்கள் கோமாளிகள் என்றும் அவர்களை புறக்கணியுங்கள் என்றும் தமிழ் ஹீரோ ஒருவர் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது