close
Choose your channels

விஜய்யின் 'சர்கார்' பட வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தின் மீதான வழக்கு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் தமிழக அரசையும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைந்ததாக இயக்குனர் முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் இலவச பொருட்களை வீசுவது போல காட்சி அமைத்தது தொடர்பாக இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்சார் செய்த திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை வழக்கு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.