ரவி மோகன், ஆர்த்தி இருவருக்கும் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்.. முழு விவரங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று ஆர்த்தி ரவி நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஜூன் மாதம் விசாரணைக்கு வரும் என்று குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், திருமண நிகழ்ச்சிகளில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டது குறித்து ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு பதிலாக, ரவி மோகன் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். நீதிமன்றம் இரு தரப்பிலும் எந்தவிதமான அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது என்றும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், இனிமேல் இரு தரப்பும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பகிரக்கூடாது என்றும் கூறியது.
இரு தரப்பினரும் தேவையில்லாத கருத்துக்களை பொது வெளியில் வெளியிட கூடாது என்றும், ஏதேனும் சொல்ல வேண்டிய கருத்துகள் இருந்தால் அதை நீதிமன்றத்தில் நேரில் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com