விஜய் கார் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

  • IndiaGlitz, [Friday,January 28 2022]

நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து பி.எம்.டபிள்யூ என்ற காரை இறக்குமதி செய்த நிலையில் அந்த காருக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என விஜய் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் அதன் பின் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவில் வெளியான உத்தரவில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் திரும்ப பெறப்பட்டன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு வரி கட்டாடததால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை அபராதம் வசூலிக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை வணிகவரித்துறை உறுதி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற காரை விஜய் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தால் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் தாமதம் செய்ததற்காக 400 சதவீத அளவிற்கு வணிகவரித்துறை வரி விதித்திருந்த நிலையில் இந்த அபராதத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் தற்போது மேற்கூறிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

More News

'நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய்': காதலர் பிறந்த நாளில் பிரியா பவானிசங்கரின் பதிவு!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் பத்து வருடமாக ஒரு இளைஞரை காதலித்து வரும் நிலையில் தனது காதலரின் பிறந்த நாளை அடுத்து 'நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய்' என பதிவு செய்து வாழ்த்து .

டைட்டானிக் போஸில் ஆர்யா-சாயிஷா: ஜாலியான ஹாலிடே புகைப்படம்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா மற்றும் சாயிஷா டைட்டானிக்  ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

தெலுங்கில் தடம்பதிக்கும் ஜான்வி கபூர்… ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகளான ஜான்வி கபூர்

காதலிக்கு மறக்கமுடியாத பரிசு வழங்கிய ரொனால்டோ… வியப்பில் ரசிகர்கள்!

உலகின் நெம்பர் ஒன் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியின் 28 ஆவது பிறந்தநாளை துபாயில்

தல தோனியின் சென்னை வருகை… என்ன காரணம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சென்னை வந்துள்ளார்.