ஊரடங்கில் டாஸ்மாக் திறப்பது போல அல்ல 10ம் வகுப்பு தேர்வு: நீதிபதிகள் அதிரடி கருத்தால் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,June 08 2020]

பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடத்தி வந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் எப்படி ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்றும், பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களை மாநில அரசை மீறலாமா என்றும், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தமிழக அரசு கவனிக்கவில்லையா என்றும், 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயத்தில் அரசு அலட்சியமாக இருக்கலாமா என்றும் அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

மேலும் 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட அனுமதிக்க முடியாது என்றும் கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வை நடத்தலாம் என்றும் ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வை நடத்தலாமா? என்பதை பிற்பகல் 2.30 மணிக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் ஊரடங்கில் டாஸ்மாக் திறப்பது போல் அல்ல, பத்தாம் வகுப்பு தேர்வு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ஆம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு இதுகுறித்து 2.30 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவின் காரணமாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவசரமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்றும் பிற்பகல் 2.30 மணிக்கு இதுகுறித்து தமிழக அரசு தனது நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

யாரெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டும் – WHO கூறியுள்ள புது விதிமுறைகள்!!!

உலகச் சுகாதார அமைப்பானது தனது முந்தைய வழிகாட்டுதல்களில் “ஆரோக்கியமான நபர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் வயதானவர்கள்,

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் அஞ்சலி?

நானும் ரெளடிதான்' 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய திரைப்படங்களை அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்

தமிழ்நாட்டில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறதா சென்னை? அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தமிழகத்தின் மொத்த பாதிப்பில்

இந்தியாவில் இனவெறுப்புடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் டேரன் சமி!!!

மேற்கு இந்திய தீவு, கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது இனவெறியுடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராயபுரத்தில் எகிறிய கொரோனா: 5 மண்டலங்களில் 2000க்கும் மேல்

தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் அதிகளவில் சென்னையில் தான் இருப்பதால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து