close
Choose your channels

'ஜெய்பீம்' வழக்கு: நடிகர் சூர்யா குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

Thursday, August 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஜெய்பீம்’ பட விவகாரம் குறித்து சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.

சூர்யா நடிப்பில் ஞானவேஎல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ’ஜெய்பீம்’ பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான காவல்துறை வழக்கை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் இந்த உத்தரவை கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.