close
Choose your channels

பிரபல இயக்குனரின் வழக்கு: சின்மயி, லீலா மணிமேகலைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பதிவு செய்த வழக்கில் பாடகி சின்மயி மற்றும் கவிஞர் லீனா மணிமேகலை ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

‘திருட்டுபயலே’ ’கந்தசாமி’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசி கணேசன். இவர் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் அந்த திரைப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாடகி சின்மயி, ‘கவிஞர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் அளித்து இருந்தது இளையராஜா அவர்களுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தன்மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் சின்மயி, லீலா மணிமேலை குறித்து இயக்குனர் சுசிகணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுசிகணேசனுக்கு எதிரான, உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை பொதுவெளியில் வெளியிட கவிஞர் லீனா மணிமேகலை மற்றும் பாடகி சின்மயி ஆகிய இருவருக்கும் இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.