லீலா மணிமேகலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை: இது 'காளி' விவகாரம் அல்ல, இயக்குனர் விவகாரம்!

  • IndiaGlitz, [Tuesday,July 05 2022]

கடந்த இரண்டு நாட்களாக லீனா மணிமேகலை இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் ‘காளி’ வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்ற போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் லீனா மணிமேகலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைப் பற்றி எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதாக இயக்குனர் சுசி கணேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுசி கணேசன் மனுவில் முகாந்திரம் இருப்பதாக கூறி லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட தடைவிதித்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘உயர் நீதிமன்றம் தடை விதித்த பின்னரும் லீனா மணிமேகலை தொடர்ந்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுசி கணேசனின் வழக்கறிஞர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ’உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தவறான கருத்துக்களை ஏன் வெளியிடுகின்றனர் என்றும் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என லீலா மணிமேகலைக்கு வழக்கறிஞர் அறிவுறுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இது குறித்து ஜூலை 21-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறி இவ்வழக்கை ஒத்திவைத்தார்.

ஏற்கனவே ‘காளி’ விவகாரத்தில் லீனா மணிமேகலையின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வரும் நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கை செய்தியும் ஊடகங்களில் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாளை முதல் சென்னை மக்களுக்கு புதிய நிபந்தனை: மீறினால் ரூ.500 அபராதம்!

நாளை முதல் சென்னை மக்களுக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிபந்தனையை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

என்னை எல்லோரும் பயன்படுத்தி கொண்டார்கள்: சில்க் ஸ்மிதா எழுதிய கடைசி கடிதம்!

நடிகை சில்க் ஸ்மிதா கடந்த 1996ஆம் ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் இறப்பதற்கு முன்னர் தெலுங்கில் அவர் கைப்பட எழுதிய கடிதம் தற்போது

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதா? மர்ம நபரின் பதிவால் பரபரப்பு!

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் பதிவு செய்ததால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இரண்டு கணவர்கள் இருந்தும் நடிகைக்கு உதவி செய்த விஷால்: அப்படி என்ன செய்தார்?

தமிழ் மற்றும் மலையாள நடிகை இரண்டு முறை திருமணம் செய்த போதிலும் அந்த இரண்டு கணவர்களும் செய்யாத உதவியை நடிகர் விஷால் செய்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 

தலைகீழாக வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் வரலட்சுமி: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி தலைகீழாக வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ