close
Choose your channels

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு  தற்கொலை!

Saturday, November 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஐஐடி விடுதி அறையில் முதலாமாண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட மாணவி கேரளா மாநிலத்தை சேர்ந்த கொல்லம் பகுதியை சேர்ந்தவர் என்றும், இந்த மாணவியின் பெயர் பாத்திமா லதீப் என்றும், சென்னை ஐஐடியில் இவர் எம்.ஏ முதலாண்டு படித்து வந்தவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கப்பல் கட்டுமான துறையில் கல்வி பயின்று கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த சாகுல் கோர்னாத் என்ற 23 வயது மாணவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவியான ரஞ்சனா குமாரி என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.