கணவனை இழந்த பெண்ணின் 2 கள்ளக்காதலர்கள் அரிவாள் வெட்டு: சென்னையில் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,January 06 2020]

கணவரை இழந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த இரண்டு கள்ள காதலர்கள் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னையில் பட்டப்பகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்ற ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து கொண்டிருக்கும் ரவி என்பவர் ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்ததாக தெரிகிறது. கணவரை இழந்த ராஜேஸ்வரி, ரவியுடன் மட்டுமின்றி அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஐயப்பன் என்ற மற்றொருவரிடமும் கள்ளக்காதலில் இருப்பதாக கூறப்படுகிறது

ஒரே நேரத்தில் இரண்டு பேருடனும் மாறிமாறி கள்ளக் காதலில் இருந்த விவகாரம் இருவருக்கும் ஒருநாள் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ராஜேஸ்வரியிடம் இருந்து விலகி விடு என்று ரவியை ஐயப்பன் மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் ரவி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை

இந்த நிலையில் இன்று காலை திடீரென அரிவாளுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த ஐயப்பன், ரவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரவி, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஐயப்பனை மடக்கி பிடித்து கைது செய்தனர்

ஒரே பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்காக இரண்டு பேர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது