close
Choose your channels

கள்ளக்காதலில் மனைவி ஓட்டம், கள்ளக்காதலனின் மாமனாரை கொலை செய்த கணவர்: சென்னையில் பரபரப்பு

Thursday, August 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் வாலிபர் ஒருவரின் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதால், அந்த ஆத்திரத்தில் கள்ளக்காதலனின் மாமனாரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி, தினேஷ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்ததாக தெரிகிறது. இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறி திடீரென தினேஷுடன் ஓடிப் போய் விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் மனைவியைக் காணாமல் அதிர்ச்சி அடைந்த கணேசன் இதுகுறித்து அக்கம்பக்கத்தினரும் விசாரித்துள்ளார். அப்போது தினேஷ் என்ற இளைஞர் அடிக்கடி வீட்டுக்கு வருவதும் தனது மனைவியுடன் கள்ளக்காதலில் இருப்பதும் தெரியவந்தது

எனவே தனது மனைவியை தினேஷ் தான் அழைத்து சென்று இருப்பார் என்பதை முடிவு செய்து அவருடைய வீட்டிற்கு கணேசன் சென்றுள்ளார். ஆனால் அவருடைய வீட்டில் தினேஷ் இல்லை. தினேஷின் மாமனார் மட்டுமே இருந்திருக்கிறார். அவரிடம் தினேஷ் எங்கே என்று கேட்டு கணேசன் தகராறு செய்திருக்கிறார். இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி உள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த கணேசன் அங்கிருந்த உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்து கள்ளக்காதலனின் மாமனார் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் இதனை அடுத்து கணேசன் தலைமறைவானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தலைமறைவான கணேசனை தேடி வருகின்றனர். மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிய ஆத்திரத்தில் கள்ளக்காதலனின் மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.