4 மாவட்டங்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க இருப்பதன் காரணமாகவும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ’தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது

நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து நான்கு மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன,.
 

More News

படுக்கையறை காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பி சம்பாதித்த கணவர் மீது புகார் அளித்த மனைவி!

இரண்டு மனைவிகளுடன் படுக்கை அறையில் தனிமையில் இருந்த காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து இலட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறையில்

கோரத்தாண்டவமாடிய அர்ச்சனா: கண்ணீர் விட்டு கலங்கிய பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அர்ச்சனா கிளப்பிவிட்ட ஒரு சிறு பிரச்சனை இன்று மிகப் பெரியதாக வெடித்து கோரத்தாண்டவம் ஆடும் அளவுக்கு ஆகிவிட்டது

கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்!

கல்லூரி மாணவி ஒருவர் அவர் படித்து வந்த கல்லூரி வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா?

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சின்னத்திரை நடிகை ஒருவருக்கு கத்திக்குத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்!

சீயான் விக்ரம் நடிப்பில், 'டிமாண்டி காலனி, 'இமைக்கா நொடிகள்' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் 'கோப்ரா'.