பூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை!!!

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

 

சென்னை அடுத்த பொன்னேரி பகுதியில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பொன்னேரி அடுத்த உத்தகண்டிகை எனும் கிராமத்தில் வசித்து வந்த முனிநாதன் என்பவரின் வீட்டில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. பூட்டி இருந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் சிலர் இப்படி கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர். 200 சவரன் தங்க நகை மட்டுமல்லாது 2.5 கி.லோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் 2.5 லட்சம் ரூபாய் போன்றவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தற்போது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மர்மக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்!!!

ஆந்திரமாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழைத் தொழிலாளி சுப்பிரமணியம். இவருடைய 5 வயதில் முதல் முறையாக பாம்பு கடித்தது எனக் கூறுகிறார்.

'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்தார் 

கோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா??? முடிவுக்கு வரவிருக்கும் விவாதம்!!!

தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில் கும்பாபிஷேகங்களிலும் இனி தமிழ் பாடல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்

மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்!!!

நடிகர் சோனுசூட்டின் மனித நேயத்தைப் பாராட்டி மகிழும் விதமாக ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம், அங்குள்ள ஒரு துறைக்கு நடிகர் சோனுசூட்டின் பெயரை வைத்து இருக்கிறது.

ஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நேற்று கால் சென்டர் டாஸ்க்கில் நன்றாக விளையாடியவர்களை வரிசைப்படுத்துதல் நிகழ்வில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.