close
Choose your channels

ஈவு இரக்கமின்றி கல்லால் அடித்து கொல்லப்பட்ட முதியவர்: சென்னையில் பயங்கரம்

Tuesday, April 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஈவு இரக்கமின்றி மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை 30 வயது வாலிபர் ஒருவர் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாலை ஓரத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அருகில் அசாம் மாநிலத்தில் இருந்து வேலை தேடி வந்த இளைஞன் ஒருவரும் சாலையோரத்தில் தங்கி இருந்ததாக தெரிகிறது. அந்த இளைஞருக்கு நாய்கள் என்றால் கொள்ளைப்பிரியம் என்பதால் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு நான்கைந்து நாய்கள் படுத்து இருக்குமாம்.

இந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர் நாயின் மீது கல்லால் எறிந்ததாக தெரிகிறது. இதில் ஒரு நாய் கல்லடி பட்டு வலியால் துடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் முதியவர் கிருஷ்ணமூர்த்தியை அதே கல்லால் அடித்துக் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதனை அடுத்து அந்த பகுதிக்கு ரோந்து வந்த காவல்துறையினர் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த முதியவரை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் 30 வயது இளைஞர் ஒருவர் முதியவரை கல்லால் அடித்தே கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இளைஞர் அடையாளம் காணப்பட்ட போது அந்த இளைஞர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரபிபில் இஸ்லாம் என்பது தெரியவந்தது.

முதலில் விசாரணையின்போது ஊமை போல் நடித்த ரபிபில் அதன் பின் போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.