"நீ அழகாக இல்லை" என சொல்லி வெளிநாடு தப்ப முயன்ற காதலன்.. திருமணம் முடித்து வைத்த போலீசார்..!

  • IndiaGlitz, [Tuesday,February 18 2020]

சென்னை அனகாபுத்தூரில் காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலனை பிடித்து திருமணம் செய்து வைத்தனர் போலீசார்.

சென்னை அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா. அவர் பொழிச்சலூர் 7-வது குறுக்கு தெரு அகத்தீஸ்வரர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். தொடர்ந்து அவர்களுக்குள் பிரச்னைகள் ஏற்படவே வெங்கடேஷ் கவிதாவை வேண்டாமென்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த கவிதா தன்னை காதலித்து மனைவியிடம் இருப்பதுபோல் என்னிடம் நடந்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வெங்கடேஷை அழைத்து வரச் சென்றபோது, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். பின்னர் அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்பொழுது வெங்கடேஷ் நான்கு வருடமாக கவிதாவை காதலித்து வந்ததை ஒப்புக்கொண்டார். கவிதா அழகாக இல்லாததால் அவரை விட்டு பிரிந்ததாக வெங்கடேஷ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஏற்கனவே வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்ததாலும், மூன்று முறை கவிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாலும், வெங்கடேஷை விட்டால் பிடிக்க முடியாது என்று எண்ணி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று இரு வீட்டார் சம்மதத்துடன் போலீசார் முடிவெடுத்து காவல் நிலையத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் நிகழ்ந்தது. பின்னர் இருவரிடமும் புகாரை திரும்பப் பெறுமாறு எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் தம்பதிகளை வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

More News

தன் குட்டியை போல் குரங்கை பார்த்துக்கொள்ளும் நாய்..! வீடியோ.

இருவரும் வருடம் கடந்து பழகும் நண்பர்கள் போல பழகி வரும் இந்த வீடியோ காண்போரை நெகிழ்வுறச் செய்துள்ளது.

இது என்ன இந்தியாவா..!? போராடியவர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி.

ஜனநாயக நாடு மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுக்குள் கொண்டு வர

2019 இல் நகைச்சுவை மூட்டிய விலங்குகளின் புகைப்படங்கள்- Photography Awards

புகைப்பட கலைஞர்களை ஈர்க்கும் விதமாக The comedy wild life என்னும் தலைப்பில் சென்ற வருடம் ஒரு புகைப்பட பரிசு போட்டி நடத்தப் பட்டது.

ஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்

சிவகார்த்திகேயன் தற்போது 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் என்பதும், இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று

இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்

பழைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீமேக் செய்வது போலவே பழைய சூப்பர் ஹிட் பாடல்களை ரீமேக் செய்வது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் வழக்கமாக உள்ளது